Wednesday, August 29, 2018

என் மாவகாரு எப்பவுமே அழகுதான்: நாகர்ஜுனாவை வாழ்த்தும் சமந்தா

என் மாவகாரு எப்பவுமே அழகுதான்: நாகர்ஜுனாவை வாழ்த்தும் சமந்தா

ஐதராபாத்: நடிகர் நாகர்ஜுனாவுக்கு சமந்தா பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். நடிகர், தயாரிப்பாளர், தொழிலதிபர்,சமூக செயற்பாட்டாளர் என பல தளங்களில் முத்திரை பதித்துள்ள நாகர்ஜுனா தமிழில் ரட்சகன், பயணம், தோழா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இன்று 59 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

 

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நாகர்ஜுனாவுக்கு அவரின் மூத்த மருமகள் சமந்தா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வயதாக ஆக என்னுடைய மாவகாரு (மாமனார்) அழகாகிக்கொண்டே இருக்கிறார். எப்போதும் ஃபன்டாஸ்டிக்காக உள்ளவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என அவர் ட்வீட் செய்துள்ளார்


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதி நாக சைத்தன்யாவை திருமணம் செய்து நாகர்ஜுனாவின் மருமகளானார் சமந்தா. இது சமந்தா மருமகளான பிறகு சொல்லும் முதல் பிறந்தநாள் வாழ்த்து என்பதால் நிச்சயம் மாமனாருக்கு ஸ்பெஷலானதாகத்தான் இருக்கும். நாகர்ஜுனாவும் சமந்தாவும் இணைந்து மனம், ராஜு காரி காதி 2, த்ராயம் போன்ற படங்களில் நடித்துள்ளனர். என்னைப்போலவே நேரத்திற்கு வருகிறார், எல்லோருடனும் கலகலப்பாக பழகுகிறார் என சமந்தாவை நாகர்ஜுனா புகழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment