Saturday, September 1, 2018

சிம்பு வீட்டு கார் முதல் மிக்ஸி வரை பறிமுதலாகும், நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

சிம்பு வீட்டு கார் முதல் மிக்ஸி வரை பறிமுதலாகும், நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

சிம்பு தற்போது தான் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கின்றார். செக்கச்சிவந்த வானம், மாநடு அடுத்து சுந்தர்.சி படம் என்று பிஸியாகவுள்ளார்.
இந்நிலையில் 2013-ல் பேசன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் சிம்புவை வைத்து படம் எடுக்க முன்வந்துள்ளது, அதற்காக ரூ 1 கோடி சம்பளம் பேசப்பட்டு ரூ 50 லட்சம் முன்பணம் கொடுத்துள்ளனர்.
ஆனால், இன்று வரை இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை, சிம்புவும் கால்ஷிட்டே கொடுக்கவில்லையாம், தற்போது நீதிமன்றத்திற்கு சென்ற பேசன் மூவி மேக்கர்ஸ் அப்போது ரூ 50 லட்சம் கொடுத்தோம், அதற்கு வட்டி ரூ 33.50 லட்சம்.
அதை எடுத்து வைத்து விட்டு செல்லுங்கள், இல்லையென்றால் அவர் கார், செல்போன் என அனைத்தையும் ஜப்தி செய்யவேண்டும் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு நீதிபதி ’சிம்பு 4 வாரத்திற்குள் இதற்கான கடன் பாதுகாப்பை அளிக்க வேண்டும், இல்லையென்றால் அவர் வீட்டில் டிவி, கட்டில், மிக்ஸி, கிரைண்டர் வரை பறிமுதல் செய்யப்படும்’ என்று கூறியுள்ளார்.



 

No comments:

Post a Comment